ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பதவிக் காலத்தின் முதல் ஆண்டில், எரிபொருள் விலை 17 ரூபாய் முதல் 39 ரூபாய் வரை குறைந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும், அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், எரிபொருள் மற்றும் பிற பொருட்களின் விலை குறைப்பு மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தரவுகளின்படி, ஆகஸ்ட் 31, 2024 மற்றும் ஆகஸ்ட் 31, 2025 ஆகிய காலகட்டத்தில், ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 33 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், லங்கா ஒட்டோ டீசலின் விலை 24 ரூபாயினாலும், சுப்பர் டீசலின் விலை 39 ரூபாயினாலும், மண்ணெண்ணெயின் விலை 17 ரூபாயினாலும் குறைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறினார்.
___________________________________________________________________
Cabinet Spokesperson Nalintha Jayatissa announced that during President Anura Kumara Dissanayake’s first year in office, fuel prices have been reduced by 17 to 39 rupees per litre. He noted that the price reductions have brought some relief to the public. According to official data, between August 31, 2024, and August 31, 2025, the price of Octane 92 petrol decreased by 33 rupees, while Lanka Auto Diesel dropped by 24 rupees, Super Diesel by 39 rupees, and kerosene by 17 rupees.