Tuesday, October 14, 2025

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கபடிப் பயிற்சியாளர் கைது!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கபடி பயிற்சியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 38 வயதான கபடி பயிற்சியாளர் ஒருவர் கபடி மற்றும் கைப்பந்து பயிற்சி மையம் நடத்தி வந்துள்ளார். அத்துடன், அவர் சூலூர் அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவிகளுக்கு கபடி மற்றும் கைப்பந்து பயிற்சி அளித்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக அந்தக் கபடி பயிற்சியாளரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் அந்தப் பள்ளியில் பயிலும் மாணவிகளை வேறுவிதமாகப் பார்த்ததோடு, சில மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவும் கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், பள்ளியின் மைதானத்தில் தனியாக இருந்த 4 மாணவிகளைப் பயிற்சி கொடுக்கிறேன் என்று அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள், பள்ளித் தலைமை ஆசிரியையிடம் முறையிட்டுள்ளனர்.

தலைமை ஆசிரியை உடனடியாகக் கருமத்தம்பட்டி மகளிர் பொலிஸ் நிலையத்தில் இது குறித்துப் புகார் அளித்துள்ளார். பொலிஸார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கபடி பயிற்சியாளர் அருண்குமார் பயிற்சி கொடுப்பதாகக் கூறி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

இதையடுத்து, பொலிஸார் அருண்குமாரைக் கைது செய்தனர். அவர் வேறு மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரா என்பது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

_________________________________________________________________

A 38-year-old Kabaddi coach, Arunkumar, has been arrested under the POCSO Act in Coimbatore district, India, for sexually harassing government school students. The coach, who conducted training at a government school near Sulur, allegedly abused four female students after taking them aside on the school playground under the guise of practice. Following a complaint by the school’s headmistress, police arrested the coach and are now investigating if more students were victimized.

Hot this week

வவுனியாவில் மாபெரும் கோலப் போட்டி – 150ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

நேற்றைய தினம், அக்டோபர் 12. 2025 (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா மாவட்ட செயலகத்தின் அனுமதியுடன்,...

மானிப்பாயில் பதற்றம்: வாகனங்களுக்கு தீ வைத்த மர்மக்கும்பல்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவின் சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில், அடையாளம் தெரியாத நான்கு...

அதிர்ச்சிச் சம்பவம்: சடலத்தை பாலியல் வன்புணர்வு செய்த நபர்!

மத்தியப் பிரதேச மாநிலம், புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின்...

பதற்றம்: அளுத்கமவில் திடீர் தீ விபத்து!

அளுத்கம பகுதியில் தீ விபத்து! இன்று திங்கட்கிழமை (13) அதிகாலை அளுத்கம நகரில்...

விசா மாற்றம்: கனடாவுக்குச் செல்ல விரும்புவோருக்கு முக்கிய செய்தி!

கனடாவில் வெளிநாட்டு விசா வழங்கும் நடைமுறைகளில் சில இறுக்கமான மாற்றங்கள் கொண்டு...

Topics

வவுனியாவில் மாபெரும் கோலப் போட்டி – 150ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

நேற்றைய தினம், அக்டோபர் 12. 2025 (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா மாவட்ட செயலகத்தின் அனுமதியுடன்,...

மானிப்பாயில் பதற்றம்: வாகனங்களுக்கு தீ வைத்த மர்மக்கும்பல்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவின் சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில், அடையாளம் தெரியாத நான்கு...

அதிர்ச்சிச் சம்பவம்: சடலத்தை பாலியல் வன்புணர்வு செய்த நபர்!

மத்தியப் பிரதேச மாநிலம், புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின்...

பதற்றம்: அளுத்கமவில் திடீர் தீ விபத்து!

அளுத்கம பகுதியில் தீ விபத்து! இன்று திங்கட்கிழமை (13) அதிகாலை அளுத்கம நகரில்...

விசா மாற்றம்: கனடாவுக்குச் செல்ல விரும்புவோருக்கு முக்கிய செய்தி!

கனடாவில் வெளிநாட்டு விசா வழங்கும் நடைமுறைகளில் சில இறுக்கமான மாற்றங்கள் கொண்டு...

சோகம்: நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்த ஒருவர் உயிரிழப்பு!

கந்தேநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நலயகர் எல்ல நீர்வீழ்ச்சியில் ஒருவர் தவறி விழுந்து...

சாலை விபத்தில் இருவர் பலி

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார்...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img